Also Watch
Read this
பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 3 ரூபாய் 14 காசுகள் உயர்ந்து, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 103 ரூபாய் 90 காசுகளுக்கு விற்பனை ஆனது. டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் 11 காசுகள் அதிகரித்து, சென்னையில் ஒரு லிட்டர் டீசல் 95 ரூபாய் 47 காசுகளுக்கு விற்பனை ஆனது. நான்காண்டுகளுக்குப் பிறகு நாடுமுழுவதும் பெட்ரோல்- டீசல் விலை உயர்ந்து உள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக எண்ணெய் நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்து உள்ளது.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு...
இந்தியாவில், கடந்த 4 ஆண்டுகளாக மாற்றமின்றி, இருந்துவந்த பெட்ரோல், டீசல் விலை இன்று மே 15ஆம் தேதி அதிரடியாக உயர்ந்தது. இந்த விலையேற்றம், வாகன ஓட்டிகளை மட்டுமின்றி, ஒட்டுமொத்த பொருளாதார கட்டமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் கடும் விளைவுகளை உண்டாக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.

சென்னை விலை நிலவரம்
பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூ.3.14 உயர்வு
ஒரு லிட்டர் ரூ.100.80ல் இருந்து ரூ.103.90 ஆக உயர்வு

டீசல் விலை
லிட்டருக்கு ரூ.3.11 உயர்வு
ஒரு லிட்டர் ரூ.95.47 ஆக அதிகரிப்பு
மேலும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 105 டாலருக்கும் அதிகமாக அதிகரித்துள்ளதே, இந்த விலை உயர்வுக்கு மிக காரணமாக கருதப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved