தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மகாமகக் திருக்குளக்கரையில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ஆபரேஷன் சிந்தூரை போற்றும் விதமாக மெகா யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சி என்.சி.சி. தலைமை அலுவலகத்திற்கு உட்பட்ட தமிழ்நாடு 8 ஆம் பட்டாலியன் சார்பில் 5 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட என்.சி.சி. மாணவ மாணவிகள் பங்கேற்றனர். ஆபரேஷன் சிந்தூரில் பங்கேற்ற வீரர்களின் தியாகத்தை கௌரவிக்கும் வகையில் மாணவ, மாணவிகள் யோகாசனங்களை செய்தனர்.