கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் நடைபெற்ற படகு போட்டியில் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். கோடை விழா மற்றும் 62 ஆவது மலர் கண்காட்சியையொட்டி கடந்த 26 ஆம் தேதி நடைபெற இருந்த படகு போட்டி கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து இன்று நடைபெற்ற போட்டியில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.