ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு வீராங்கனை வித்யா ராம்ராஜ் கால் வீக்கத்துடன் ஓடி, 400 மீட்டர் தடை தாண்டுதலில் வெண்கலம் பதக்கம் வென்றுள்ளார். தென்கொரியாவின் குமி நகரில் நடைபெற்று வரும் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணியில் தமிழக வீரர், வீராங்கனைகள் 9 பேர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் நேற்று நடைபெற்ற 400 மீட்டர் தடைதாண்டும் போட்டியில் தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் கலந்து கொண்டார். இதில் அவர் பந்தய தூரத்தை 56 புள்ளி 46 வினாடிகளில் கடந்து 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றார். இந்நிலையில் கால் வீக்கத்துடன் ஓடி பதக்கம் வென்ற வீராங்கனைக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.