திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தனியார் ஆம்புலன்சும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியானது. சந்திராபுரம் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் போதையில் இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்ததை அடுத்து தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து செல்லப்பட்டார். இந்நிலையில் உடுமலை சிக்னல் அருகே ஆம்புலன்ஸ் வந்து கொண்டிருந்த போது, எதிரே வந்த கார் மீது மோதியதில், நோயாளியுடன் ஆம்புலன்ஸ் தலைகீழாக கவிழ்ந்தது.