நாகை அருகே காதல் திருமணம் செய்து கொண்ட 19 வயது பெண் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். தாமரைப்புலம் பகுதியை சேர்ந்த 19 வயதான பூவரசியும், வீரமணி என்பவரும் காதலித்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில் பூவரசி தனது வீட்டின் அருகே இருந்த குளத்தில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் வீரமணிக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.