Also Watch
Read this
By: Web Team

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே மாரியம்மன் கோயில் திருவிழாவை ஒட்டி கிரேன் மூலம் பறவை காவடி நிகழ்ச்சி ஆட்டம் பாட்டம் என களைகட்டியது.
ஓரசோலை அண்ணா நகரில் உள்ள மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் பறவை காவடி நிகழ்ச்சி நடைபெற்றது.
பக்தர் விரதமிருந்து அலகு குத்தி பறவை காவடியாக வந்தார். இதில் திரளான பக்தர்கள் வேடம் அணிந்து, பால்குடம் ஏந்தி ஊர்வலமாக வந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved