Also Watch
Read this
By: Manigandan Raja

இலவச கண் பரிசோதனை :
கடலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள பேருந்துகளை கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் ஒரே இடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வில் பேருந்தில் சிசிடிவி கேமரா இயங்குவது குறித்தும் முதலுதவி பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளதா என்று ஓட்டுரிடம் கேட்டறிந்து ஆய்வு மேற்கண்டார் தொடர்ந்து இந்த ஆய்வின் போது வாகனங்கள் முறையாக தகுதிச்சான்று பெற்றிருக்கின்றனவா?
விபத்து சமயங்களில் மாணவர்கள் அவசரமாக வெளியேற வாகனங்களில் அவசர வழி உள்ளதா? மாணவர்கள் வெளியே தலையை நீட்டுவதை தடுக்க ஜன்னல் கம்பிகள் நெருக்கமாக
இருக்கிறதா?
டிரைவர் கேபின் தனியாக அமைக்கப்பட்டுள்ளதா? கதவுகளுக்கு பூட்டு உள்ளதா?, வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதா? என்பதனை பார்வையிட்டு ஆய்வு செய்தார் பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு இந்த ஆய்வு நடைபெறும் இடத்தில் ஓட்டுநர்களுக்கும் இலவச கண் பரிசோதனை நடைபெற்றது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved