Also Watch
Read this
By: Manigandan Raja

விபத்து ஏற்பட்டு மற்றொரு கட்டிடம் தரைமட்டமானது :
கும்பகோணம் அருகே சுவாமிமலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட திருவலஞ்சுழி அருகில் மணப்படையூர் செல்லும் வழியில் ஜேசுதாஸ் மற்றும் இவரது தாய் மேரி செல்வராணி ஆகியோர்களுக்கு சொந்தமான அன்னை மாதா பயர் வொர்க் என்கின்ற நாட்டு வெடிகள் தயாரிக்கும் கூடம் உள்ளது.
தற்போது கோவில்களில் திருவிழாக்கள் அதிகளவில் நடைபெற்று வருவதால் திருவிழாக்களுக்கு தேவையான நாட்டு வெடிகள் அதிக அளவில் தயாரித்து இருப்பு வைக்கப்பட்டுள்ளது .
இந்த நிலையில் இன்று காலை பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்ட, நாட்டு வெடிகள் இருப்பு வைக்கப்பட்டிருந்த கட்டிடம் முற்றிலும் தரைமட்டமானது.
இந்த வெடி விபத்தின் சத்தம் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடங்களில் கேட்டுள்ளது. ' நல்ல வேளையாக அதிகாலை நேரத்தில் இந்த விபத்து நடைபெற்றதால் உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது . சம்பவ இடத்தில் சுவாமிமலை காவல் நிலை துறையினர், விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த வாரம் இதே பட்டாசு தயாரிப்பு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டு ஒரு கட்டிடம் தரைமட்டமான நிலையில் இன்று ஒரு விபத்து ஏற்பட்டு மற்றொரு கட்டிடம் தரைமட்டமானது பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved