2025-ஆம் ஆண்டிற்கான உலக அழகி பட்டத்தை தாய்லாந்து நாட்டை சேர்ந்த சுச்சாட்டா சுவாங்ஸ்ரீ வென்றார். 72-வது 'மிஸ் வேர்ல்ட்' உலக அழகி போட்டி, தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் மே 10-ஆம் தேதி தொடங்கியது. அதில், 109 நாடுகளில் இருந்து அழகிகள் கலந்து கொண்டனர். போட்டியின் இறுதிச்சுற்று ஹைதராபாத்தில் உள்ள ஹைடெக்ஸ் அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில், தாய்லாந்தை சேர்ந்த ஓபல் சுசாட்டா சாங்ஸ்ரீ வெற்றி பெற்று 2025-ம் ஆண்டிற்கான உலக அழகி பட்டத்தை வென்றார். இதையடுத்து 2024 உலக அழகி பட்டத்தை வென்றிருந்த செக் குடியரசு அழகி கிறிஸ்டினா பிஸ்கோவா, 2025-ம் ஆண்டுக்கான உலக அழகி ஓபல் சுசாட்டாவிற்கு மகுடத்தை சூட்டினார்.