Also Watch
Read this
By: Manigandan Raja

மக்கள் கடும் வாக்குவாதம் :
சேலம் அரசு மருத்துவமனையில் திருச்செங்கோடு தேர் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக மருத்துவத்துறை அமைச்சர் அருண்ராஜ்
பதிவு துறை மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் ஆகியோர் வருகை தந்தனர்.
தொடர்ந்து அவரது குடும்பத்தை சந்தித்து ஆறுதல் தெரிவித்து சென்றனர் அப்பொழுது போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் பார்த்திபனிடம் அங்கு காத்திருந்த
நோயாளிகளின் உறவினர்கள் இங்கு ஃபேன் ஓடவில்லை இரவு முழுவதும் காத்திருக்கும் எங்களுக்கு பெரும் அவதியாக உள்ளது என்று கூறினர் அதை உடனடியாக அமைச்சர் செய்து தருவதாக கூறிய நிலையில்,
நிர்வாகிகள் தடுத்ததாக கூறி அந்த நபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் உடனடியாக அங்கு வந்து அமைச்சர் உங்கள் குறைகளை நான் கேட்டு விட்டேன் அதை சரி செய்து தருகிறேன்.
அப்பொழுது அந்த நம்பர் உங்களை நான் குறை சொல்லவில்லை இவர்களைப் போன்ற நபர்கள்தான் உங்களது பெயர் கெடுகிறது பொதுமக்களை நிர்வாகிகள் யாரும் தடுக்காதீர்கள் சொல்லவரும் குறைகளை கேட்டால் தான் அவரால் நன்றாக செயல்பட முடியும் என்று அந்த நபர் கூறினார்.
உடனடியாக அமைச்சர் நிர்வாகிகளை அனைவரையும் சென்று அவரவர் பணிகளை பாருங்கள் என்று கூறி அனுப்பினார் இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved