Also Watch
Read this
By: Manigandan Raja

அமைச்சர் தென்னரசு ஆய்வு :
காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிக்கு பயன்படுத்தக்கூடிய ஸ்ட்ரக்சர்களில் நேற்று முன்தினம் காற்றுடன் கூடிய மழையினால் முறிந்து
விழுந்த மரங்களை அப்புறப்படுத்தி மருத்துவமனை ஒப்பந்த ஊழியர்கள் அதிர்ச்சியூட்டினர்.
இது குறித்து மருத்துவமனை பெண் ஊழியர் ஒருவர் கேள்வி கேட்ட ஒப்பந்த தூய்மை மேலாளர் அலட்சியமாக பேசி பதிலளித்தார். மேலும் இது குறித்து நமது நியூஸ் தமிழ் குழு செய்தி சேகரித்த நிலையில் செய்தி சேகரிப்பதற்கு அனுமதி பெற்றீர்கள் என மிரட்டும் தோணியில் பேசி அடாவடி செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இது குறித்து நமது நியூஸ் தமிழில் செய்தி வெளியான நிலையில் அமைச்சராக பொறுப்பேற்று முதன்முதலில் காஞ்சிபுரம் வந்த வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் SPK.தென்னரசு காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு நியூஸ் தமிழில் செய்தி வெளியானது குறித்து.
மருத்துவமனை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு பின்னர் செய்தியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஒப்பந்த தூய்மை மேலாளரை கண்டித்த அமைச்சர் மருத்துவமனைக்கு குப்பை கழிவுகள்,மரங்கள் போன்ற தேவையற்றவைகளை அப்புறத்த தேவையான வாகனங்கள் குறித்து கேட்டறிந்து உடனடியாக அதனை பூர்த்தி செய்து தர ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved