செயற்கைக் கோள் படங்கள் வெளியானது : ஈரானின் தாக்குதல்களால் துபாயின் ஜபல் அலி துறைமுகம் மற்றும் தொழிற்பேட்டைகள் மீது அடர்ந்த கரும்புகை எழும் செயற்கைக்கோள் படங்கள் வெளியாகியுள்ளது. ஈரானிய ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்ட போது அதன் சிதறல் துறைமுக பகுதியில் விழுந்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வார இறுதியில் வெளியிட்டப்பட்ட செயற்கைக்கோள் படங்கள், துறைமுகத்தில் தீப்பிழம்புகள் மற்றும் கரும்புகை எழுவதை தெளிவாக காட்டியுள்ளது. இந்த சம்பவங்கள் மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றத்தை குறிப்பாக அமீரகத்தின் முக்கிய வர்த்தக மையங்கள் மீதான தாக்குதலை உறுதிபடுத்துவதாக கூறப்படுகிறது. Related Link அமெரிக்க போர் விமானம் விழுந்து நொறுங்கிய காட்சி