974 பேர் உதவி கோரினர் : மத்திய கிழக்கு நாடுகளில் போர் சூழல் காரணமாக பாதிக்கப்பட்ட தமிழர்களை மீட்பதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறதுஅந்த வகையில் கடந்த ஜனவரி 28ஆம் தேதி இரவு 11:55 மணியிலிருந்து தற்போது வரை 974 பேர் உதவி கோரி உள்ளதாக தமிழ்நாடு அரசின் வெளிநாடு வாழ் நலத்துறை அமைச்சகம் தகவல்.அதில் வகையில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் - 498 பேர்ஐக்கிய அரபு நாட்டில் - 253 பேர்பக்ரேன் நாட்டில் - 95 பேர்கத்தாரில் - 66 பேர்சவுதி அரேபியாவில் - 13 பேர்சிங்கப்பூர் - 25 பேர் பிரான்ஸ் - 1 பேர்இஸ்ரேல் - 2 பேர்மலேசியா - 3 பேர்ஓமன் - 6 பேர்அமெரிக்கா மற்றும் கனடா - 12 பேர்இதுவரை தமிழர்கள் சுமார் 974 பேர் தமிழக அரசு உதவியை நாடி உள்ளனர். இவர்கள் அனைவரும் தொழில் மற்றும் சுற்றுலா தளத்திற்கு சென்றவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளதுதற்போது வரை யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் இல்லை என தமிழ்நாடு அரசு வெளிநாடு வாழ் நலத்துறை தகவல் தெரிவித்துள்ளது தொலைபேசியில் உதவி கேட்ட அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு அவர்களுக்கு தங்கும் இடம் உணவு வசதி உள்ளிட்டவை கொடுக்கப்பட்டுள்ளதுதங்கள் உறவினர்கள் சவுதி, குவைத் போன்ற நாடுகளில் தொழில் செய்பவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும், தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கை மேற்கொண்டு இருக்கிறதுஉறவினர்கள் யாரும் பதட்டப்பட வேண்டாம் அச்சப்படத் தேவையில்லை எனவும் தமிழ்நாடு அரசு வெளிநாடு வாழ் நலத்துறை தெரிவித்துள்ளதுதற்போது வரை விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் இவர்களை பத்திரமாக அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் என தெரிவித்துக் கொள்ளப்பட்டுள்ளது. Related Link அராம்கோ எண்ணெய் ஆலை மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்