ஐரோப்பாவில் நடைபெற்ற மிகப்பெரிய போட்டியான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதி போட்டியில், இன்டர் மிலன் அணியை வீழ்த்தி பி.எஸ்.ஜி அணி சாம்பியன் பட்டம் வென்றதனை சாலையில் திரண்டு ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடியபோது வன்முறை வெடித்தது. நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் ரசிகர்களின் கூட்டத்தை கலைப்பதற்காக கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். அப்போது போலீசாருக்கும் - மக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 2 கார்கள் தீக்கிரையாக்கப்பட்டன.