Also Watch
Read this
Posted on: Mar 22, 2026 09:11 AM
By: Manigandan Raja

இரு இந்திய வீராங்கனைகளும் தோல்வி :
பிரான்ஸ் ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டியில் இந்திய வீராங்கனைகள் இருவருமே தோல்வியடைந்து வெளியேறினர். முதல் அரையிறுதி சுற்றில் இந்தியாவின் தன்வி ஷர்மாவும், ஜப்பானின் நகோமி ஒகுஹராவும் மோதினர்.
இதில், ஜப்பான் வீராங்கனை 21-க்கு 9, 21-க்கு 16 என்கிற செட் கணக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு அரையிறுதி போட்டியில், இந்தியாவின் இஷாராணி பரூவாவை, தாய்லாந்தின் பிட்சமோன் ஒபட்னிபுத் 21-க்கு 12, 23-க்கு 21 என்கிற செட் கணக்கில் வீழ்த்தினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved