சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கவுண்டம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளை பாத்திரம் கழுவுதல், பள்ளி வளாகத்தை சுத்தம் செய்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள செய்ததாக செய்தி வெளியானதை அடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சத்துணவு சமைப்பதில் முறைகேடு செய்த சத்துணவு அமைப்பாளர் புவனேஷ்வரி மீது தலைமை ஆசிரியர் புகார் தெரிவித்ததால், ஆத்திரமடைந்த புவனேஷ்வரி, கடந்த ஆண்டு எடுத்த வீடியோவை தற்போது பகிர்ந்ததாக கூறப்படுகிறடுது.