Also Watch
Read this
By: Fyrose Banu

ரஷ்ய எண்ணெயை வாங்கியதற்காக இந்தியா மீது விதிக்கப்பட்ட கூடுதல் 25 சதவீத வரியை இந்திய நேரப்படி பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி அதிகாலை 12:01 மணிக்கு நீக்கப்படும் என நீக்கிய அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதன் மூலம், இந்தியப் பொருட்களுக்கான பரஸ்பர வரிகளை வாஷிங்டன் 25 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைக்கிறது. ரஷ்ய கூட்டமைப்பின் எண்ணெயை இறக்குமதி செய்வதை நிறுத்தவும், அடுத்த 10 ஆண்டுகளில் பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்காக அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தத்தை இந்தியா உறுதி அளித்துள்ளதாகவும் டிரம்ப் கையெழுத்திட்ட அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் இந்தியாவின் எண்ணெய் கொள்முதல் தொடர்பாக பல மாதங்களாக நிலவி வந்த பதட்டங்களைத் தணிக்கிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved