மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே முத்து கருப்புசாமி கோவிலில் ஒரு கிராமத்தினர் மற்றொரு கிராமத்தினருக்கு அருள் வாக்கு கூறும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அலங்காநல்லூர் அருகே வலசை கிராமத்தில் முத்து கருப்புசாமி கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழாவை முன்னிட்டு மேள தாளங்கள் முழங்க, வலசை கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், அழகாபுரி கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு சாமியாடி அருள் வாக்கு கூறினர். இதில் ஏராளமானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.