Also Watch
Read this
Posted on: Mar 17, 2026 04:31 PM
By: Manigandan Raja

மின்கோபுரத்தில் ஏறி மிரட்டல் விடுத்த இளைஞர் :
சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட தனது நிலத்தை மீட்டுத் தரக்கோரி, இளைஞர் ஒருவர் மின்கோபுரத்தில் ஏறி மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சோந்திரா (Sondra) கிராமத்தைச் சேர்ந்த கிஷன் லால் நிஷாத் என்பவர்.
தனது நிலத்தை எஃகு உற்பத்தி நிறுவனம் ஆக்கிரமித்துள்ளதாகவும், அதனை மீட்க 12 ஆண்டுகளாக போராடி வருவதாகவும் தெரிவித்தார். பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்ககாததால், விரக்தியில் மின்கோபுரத்தில் ஏறினார். இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved