வெளிநாடு பயணம் செல்லும் பிரதமர் மோடிக்கு, மணிப்பூருக்கு செல்ல நேரமில்லையா என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், இந்தியா, கனடா உறவு குறித்து பெருமையாக் பேசிய காலம் இருந்ததாகவும், ஆனால், அதன் பிறகு எல்லாம் தவறாகி விட்டதாகவும் கூறியுள்ளார். மேலும், கடந்த மே 2023 முதல் பிரதமர் நரேந்திர மோடியின் 35-ஆவது வெளிநாட்டு பயணம் இது என குறிப்பிட்டுள்ளவர், இதுபோன்ற வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் அனைத்து ஆற்றலும், உற்சாகமும் உள்ள பிரதமர் மோடிக்கு, மக்களின் துயரம், வேதனை மற்றும் துன்பம் தணியாமல் தொடரும் மணிப்பூருக்கு செல்ல முடியாதா என்று கேள்வி எழுப்பி உள்ளார்.இதையும் படியுங்கள் : குற்றால அருவிகளில் குளிக்க 2வது நாளாக தொடரும் தடை..