Also Watch
Read this
Posted on: Mar 22, 2026 09:34 AM
By: Manigandan Raja

தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து :
தென் கொரியாயாவில் கார் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். டேஜியான் நகரில் உள்ள 3 மாடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டபோது சுமார் 170 தொழிலாளர்கள் தொழிற்சாலை உள்ளே இருந்ததாக கூறப்படுகிறது.
விபத்து நடந்தவுடன் தரைத்தளத்தில் இருந்தவர்கள் விரைந்து வெளியேறிய நிலையில், 2 மற்றும் 3-வது தளங்களில் இருந்தவர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர். தகவலறிந்து சுமார் 500 தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அனைத்து உள்ளிருந்தவர்களை மீட்டனர். விபத்தில் 60 பேர் வரை காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved