பிராமணர்களை அவமதித்து பேசியதாக நடிகரும், இயக்குநருமான அனுராக் காஷ்யப் மீது ஜெய்ப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பிராமணர்கள் மீது சிறுநீர் கழிப்பேன் என சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டது மிகப்பெரும் சர்ச்சையானது. இதற்காக மன்னிப்பு கேட்ட போதும், ஜெய்ப்பூரில் உள்ள பஜாஜ் நகர் காவல் நிலையத்தில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டது.