Also Watch
Read this
By: Manigandan Raja

ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவை, இரண்டாம் நிலையில் இருக்கும் எந்தவொரு நாடுடனும் ஒப்பிடக்கூடாது என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

உலக பொருளாதார மன்ற மாநாட்டில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் உலகளாவிய தாக்கம் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது செயற்கை நுண்ணறிவு திறனில் இந்தியா பின்தங்கியிருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் பேசியதற்கு மறுப்பு தெரிவித்த அமைச்சர் அஸ்வினி, ஏஐ தயார் நிலையில் இந்தியா உலகளவில் 3-வது இடத்தில் இருப்பதாக ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆய்வறிக்கையை சுட்டிக்காட்டினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved