Also Watch
Read this
Posted on: Mar 24, 2026 02:52 PM
By: Manigandan Raja

லாலு மீது சிபிஐ FIR :
வேலை வழங்க லஞ்சமாக நிலம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் சிபிஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரிய ராஷ்ட்ரிய ஜனதா கட்சியின் தலைவர் லாலுவின் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
2004-2009 ல் ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் யாதவ், ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நிலத்தை லஞ்சமாகப் பெற்றதாக அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக சிபிஐ பதிவு செய்த எப்ஐஆரை ரத்து செய்யக்கோரி லாலு டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி முகாந்திரம் இல்லை எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved