குமரி மாவட்டத்தில் கனமழை காரணமாக காளிகேசம் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட யாரும் அங்கு செல்லக் கூடாது என வனத்துறை தடை விதித்துள்ளது. உலக்கை அருவி, கீரிப்பாறை, வெள்ளாம்பி உள்ளிட்ட பகுதிகளில் மழையின் அளவு அதிகரித்து காளிகேசம் ஆற்றில் வழக்கத்திற்கு மாறாக தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.