Also Watch
Read this
By: Manigandan Raja

வீடு இடிப்பு பணி :
வந்தவாசி அடுத்த இளங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் முனியன் இவர் அரசு தொகுப்பு வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர் இந்த நிலையில் வீட்டை சீரமைப்பதற்கு இன்று காலை பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது .
அப்போது திடீரென வீடு இடிந்து விழுந்ததில் அபினேஷ் மற்றும் முகேஷ் ஆகிய இரண்டு பள்ளி மாணவர்கள் வீட்டின் இடிபாடுகளில் சிக்கி சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர் பத்து வயது சிறுவன் ஸ்ரீராம் படுகாயம் அடைந்து வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவல் அறிந்து பொன்னூர் காவல் நிலைய போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று இரண்டு உடல்களை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
வீட்டை சீரமைக்கும் போது வீடு கட்டிடம் இடிந்து விழுந்ததில் இரண்டு பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved