திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் உள்ள தென்குடி மகா மாரியம்மன் கோயில் பங்குனி உத்திர தீமிதி திருவிழாவில், சூரிய உதயத்திற்கு முன்பாக பக்தர்கள் 40 அடி உயர சப்பரத்துடன் குண்டத்தில் இறங்கி வழிபாடு செய்தனர். அம்மன் தீ குண்டத்திற்கு எதிர்ப்புறம் அமர்ந்து தீமிதிக்கும் பக்தர்களை பார்ப்பதாகவும், அதனால் காத்தவராய சப்ரத்துடன் பக்தர்கள் தீ மிதிப்பதையும் ஐதீகமாகக் கொண்ட இத்திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.