Also Watch
Read this
By: Fyrose Banu

மேட்டூர் காவேரி நகரில் ஸ்ரீ சக்தி காளியம்மன், மாரியம்மன் திருக்கோயிலின் 84-ம் ஆண்டு திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து மாரியம்மனுக்கு கம்பம் நடுதல், திருக்கல்யாணம், ஊஞ்சல் ஆராதனை ஆகியவை நடைபெற்றது. இந்நிலையில் இன்று காவிரி ஆற்றில் இருந்து 500- கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம், தீர்த்த குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலை வந்தடைந்தனர்.

அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
இதனை தொடர்ந்து புனித நீரை ஊற்றி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. 11ஆம் தேதி அக்னி குண்ட விழா, பொங்கல், கரகம் எடுத்தல் நிகழ்ச்சி நடைபெறும். அதனை தொடர்ந்து 13ஆம் தேதி கம்பம் காவிரி ஆற்றில் விடுதல், மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவடைகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved