தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் பரமசிவன் மலைக்கோவிலுக்கு திரும்பும் பாரம்பரிய நிகழ்வு நடைபெற்றது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பரமசிவன், அரண்மனை வளாகத்தில் வீற்று பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார். தொடர்ந்து, கேரள செண்டை மேளங்கள் முழங்க கோலாட்டம், தேவராட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளுடன் ஊர்வலம் நடைபெற்றது.