செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி துணை மேயர், மாமன்ற உறுப்பினர்கள் கழுத்தில் பாசி மாலையை அணிவித்து தங்களுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என நரிக்குறவர்கள் நூதன முறையில் கோரிக்கை விடுத்தனர். அகரம் தென் பகுதியில் வசித்து வரும் நரிக்குறவர்களின் கோரிக்கையை ஏற்ற மாமன்ற உறுப்பினர்கள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.