Also Watch
Read this
Posted on: Mar 18, 2026 09:35 AM
By: Fyrose Banu

பல மாதங்களாக காணாமல் போன பழங்கள்...கண்டுபிடிக்க சிசிடிவி பொருத்திய உரிமையாளர்! சிசிடிவி காட்சியில் பதிவான உருவம்! திருப்பத்தூர் நகர பகுதியைச் சேர்ந்த இர்ஃபான் என்பவர் ஜின்னா ரோடு பகுதியில் பல ஆண்டுகளாக பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். இரவு நேரத்தில் பழக்கடையை தாட்டு பை கொண்டு கயிற்றால் கட்டிவிட்டு வீட்டிற்கு செல்வது வழக்கமாகக் கொண்டு இருந்தார்.
பல மாதங்களாக காணாமல் போன பழங்கள்
இந்த நிலையில் தினம் தோறும் ஐந்து கிலோ மற்றும் ஆறு கிலோ என பழங்கள் குறைந்து கொண்டே வந்ததாக கூறப்படுகிறது. அதனை கண்டுபிடிக்க இர்ஃபான் பழக்கடைக்கு முன்பு சிசிடிவி பொருத்தியுள்ளார்.
சிசிடிவி காட்சியில் பதிவான உருவம்!
அப்போது இரவு நேரத்தில் மர்ம நபர் ஒருவர் பழக்கடைக்கு வந்து பழத்தை திருடி செல்வது பதிவாகி இருந்தது. இது குறித்து திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் இர்ஃபான் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved