கோவில்பட்டியில் பக்கத்து வீட்டு மாடியில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் விசாரணை இறுதி கட்டத்தை எட்டி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தடயவியல் மற்றும் டி.என்.ஏ. பரிசோதனை வந்த பின்னர், வெள்ளிக்கிழமைக்குள் மர்மம் விலகும் என மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் தகவல் தெரிவித்துள்ளார்.