Also Watch
Read this

அரசு மதுபான கடைகளில், காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, 4 அரசு மதுபான கடை ஊழியர்கள் இரண்டாவது நாளாக இன்றும் பணிகளை புறக்கணித்தனர்.

வெறிச்சோடிய டாஸ்மாக் கடைகள்
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மதுபான கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறுவதை நிறுத்த கோரியும், அதற்கு தகுந்த பணியாளர்களை நியமிக்க வேண்டும், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் இரண்டாவது நாளாக இன்றும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நண்பகல் 12 மணி ஆகியும்...
இந்நிலையில், சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் உள்ள மஞ்சினி, நரசிங்கபுரம், ராமநாயக்கன்பாளையம் உள்ளிட்ட நான்கு மதுபான கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் 12 மணிக்கு திறக்கப்படக்கூடிய அரசு மதுபான கடையை இரண்டாவது நாளாக இன்றும் திறக்கவில்லை.

வெறிச்சோடிய மதுக்கடைகள்
டாஸ்மாக் அரசு மதுக்கடை ஊழியர்கள் தொடர் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மது பிரியர்கள் இல்லாமல் அரசு மதுபான கடை வெறிச்சோடி காணப்பட்டு வருகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved