அரியலூர் மாவட்டத்தில் கீழப்பழுவூர் அருகே மூன்று ஆண்டுகளாக காணாமல் போன முதியவரின் சடலம் கிணறுகளில் கிடக்கிறதா என சிபிசிஐடி போலீஸார் தேடி வந்தனர். மலத்தான்குளத்தை சேர்ந்த 79 வயதான பெருமாள் என்பவர் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் காணவில்லை என்றும், அவரை தேடி கண்டுபிடித்து கொடுக்க கோரி அவரது குடும்பத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனையடுத்து, வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி முதியவரை கண்டுபிடிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தநிலையில், பெருமாள் நீர்நிலைகளில் தவறி விழுந்திருக்கலாமோ என்ற கோணத்தில், அப்பகுதியில் உள்ள 8 கிணறுகளில் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் சிபிசிஐடி போலீஸார் தேடும் பணியில் ஈடுபட்டனர்.