Also Watch
Read this
Posted on: Mar 23, 2026 04:05 PM
By: Manigandan Raja

ஏஜென்சி மூலம் வழங்க ஏற்பாடு :
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த சளுக்கை கிராமத்தில் இண்டேன் சமையல் எரிவாயு சிலிண்டரை பெறுவதற்கு பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சிலிண்டரை பெற்றுச் சென்றனர்.
ஈரான் மற்றும் அமெரிக்கா போர் காரணமாக சமையல் எரிவாய சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் சமையல் எரிவாயு சிலிண்டர் இல்லாமல் தவித்து வரும் நிலையில் வந்தவாசி அடுத்த சளுக்கை கிராமத்தில் உள்ள தனியார் இன்டேன் கேஸ் குடோன் முன்பாக வந்தவாசி சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி சிலிண்டருடன் காலை 6 மணி முதல் காத்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து சிலிண்டர் லாரி வந்தவுடன் பொதுமக்கள் போட்டி போட்டுக் கொண்டு சமையல் எரிவாயு சிலிண்டரை நீண்ட வரிசையில் நின்று பெற்றுச்சென்றனர். மேலும் சிலிண்டர் கிடைக்காதவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved