சென்னை சிந்தாதிரிப்பேட்டை அருகே தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தடுத்து நிறுத்தியதால், போலீசாருடன் அக்கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 3 மாதங்களாக அனுமதி கோரியும் அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், பொறுமையிழந்த தவெகவினர் நிகழ்ச்சி நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை செய்தனர்.