அமெரிக்காவில் பெரும் பேசுபொருளான எப்ஸ்டீன் கோப்புகள் விவகாரத்தில் பிரதமர் மோடியின் பெயரும் குறிப்பிடப்பட்டிருப்பதற்கு மத்திய அரசு திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் சிறுமிகளை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த தொழிலதிபர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் கைதாகி சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டார். எப்ஸ்டீன் தொடர்புடைய கோப்புகளில் டிரம்ப், எலான் மஸ்க், பில்கேட்ஸ் ஆகியோரின் பெயரை தொடந்து பிரதமர் மோடியின் பெயர் மற்றும் அவர் 2017ல் மேற்கொண்ட இஸ்ரேல் பயணம் குறித்த குறிப்புகள் இடம் பெற்றிருந்தது. எஃப்ஸ்டீனின் கோப்புகளில் பிரதமரின் இஸ்ரேல் பயணத்தை தவிர மற்ற அனைத்தும் உண்மையல்ல என்றும் இதற்கு முக்கியத்துவம் அளிக்கத்தேவையில்லை எனவும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. Related Link உள்கட்டமைப்பு மேம்பாட்டால் வளர்ச்சி பாதையில் இந்தியா