காஸாவில் உணவு உள்ளிட்ட நிவாரண உதவிகள் பெற்றுக் கொண்டிருந்த அப்பாவி மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய கொடூர தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டனர். 175 பேர் காயமடைந்ததனர். பசியால் வாடும் பாலத்தீனிய மக்கள் அமெரிக்கா நிதியுதவியால் இயங்கி வரும் உதவி மையம் அருகே உணவுகளை பெற்றுக்கொண்டிருந்த போது இஸ்ரேல் ராணுவம் கண்மூடிதனமாக துப்பாக்கி சூடு நடத்தியது. இஸ்ரேல் ராணுவம் கடந்த மார்ச் மாதம் முதல் காசாவிற்கு வரும் உதவிகளை தடுத்து நிறுத்தியதால் அங்கு மக்கள் பசி, பட்டினி, பஞ்சத்தால் உயிரிழந்து வருகின்றனர்.