Also Watch
Read this
Posted on: Mar 29, 2026 12:23 PM
By: Manigandan Raja

நேபாளத்தில் இந்திய ஆசிரியர்கள் கைது :
நேபாள நாட்டிற்கு மாணவர்களை அழைத்துக்கொண்டு கல்வி சுற்றுலா சென்றிருந்தபோது, மது அருந்தியதாக இந்தியாவின் ஐந்து ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பீகார் தர்ஷன் திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட கல்வி சுற்றுலாவை முடித்துக்கொண்டு திரும்பும் வழியில், இந்தியா-நேபாள எல்லைப் பகுதியான Supaul மாவட்டத்தில் உள்ள சோதனை சாவடியில் நடத்தப்பட்ட சோதனையில் அவர்கள் சிக்கினர்.
போலீசார் வழக்கமான சோதனையை நடத்தினர். breath-analyser மூலம் சோதித்ததில் அவர்கள் மது அருந்தியது உறுதியானதையடுத்து, கைது செய்யப்பட்டனர். நேபாளம் முழுவதும் மது விலக்கு அமலில் உள்ள நிலையில், அவர்கள் மீது இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved