காசா உடனான போரை முடிவுக்கு கொண்டு வருமாறும், ஹமாஸ் வசமுள்ள அனைத்து பணயக்கைதிகளையும் மீட்க வலியுறுத்தியும் இஸ்ரேல் அரசுக்கு மக்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில், சாலையில் நெருப்பு மூட்டியும், பணயக்கைதிகளின் புகைப்படத்தை ஏந்தியும் திரளான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.