Also Watch
Read this
Posted on: Nov 22, 2024 01:10 PM
By: Srini Vasan

சனாதன தர்மம் விவகாரம் தொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதி தாக்கல் செய்த மனுவை வரும் பிப்ரவரி மாதத்திற்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
மஹாராஷ்டிரா, பீஹார், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தனக்கு எதிராக பதியப்பட்டுள்ள வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி உதயநிதி ஸ்டாலின் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதில் வழக்கில் எதிர்மனுதாரர்கள் பலர் இதுவரை பதில் மனு தாக்கல் செய்யவில்லை, எனவும் அவர் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யாத அனைத்து எதிர்தரப்பும் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் மேலும் இந்த வழக்குகளின் விசாரணைக்காக உதயநிதி நேரடியாக ஆஜராக தேவை இல்லை என்ற விலக்கு தொடரும் என கூறியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved