குஜராத் மாநிலம் சூரத்தில், சைத்ர நவராத்திரியின் முதல் நாளன்று, 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் ராஜஸ்தானின் பாரம்பரிய உடை அணைந்து கூமர் நடனத்தை நிகழ்த்தினர். இந்தாண்டு துவிதியை மற்றும் திரிதியை ஒரே நாளில் இணைவதால் வழக்கமான ஒன்பது நாள் இல்லாமல் எட்டு நாட்கள் என மார்ச் 30 ம் தேதி முதல் ஏப்ரல் 6 ம் தேதி வரை சைத்ர நவராத்திரி கொண்டாடுகின்றனர்.