கிளர்ச்சியாளர்கள் வசமிருந்த வாட் மதானி நகரை மீண்டும் கைப்பற்றியதை சூடான் ராணுவ வீரர்கள் பொதுமக்களுடன் இணைந்து கொண்டாடினர். தலைநகர் கார்ட்டூமிலிருந்து தென்கிழக்கே சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வாட் மாதனியை கிளர்ச்சியாளர்கள் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக தங்ளது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். வீடுகளில் கொள்ளையடிப்பது, துஷ்பிரயோகங்கள் என மக்களை இன்னலுக்கு ஆளாக்கிய கிளர்ச்சியாளர்களை விரட்டியடிக்க ராணுவம் கடந்த 2023 ம் முதல் அவர்களுடன் போரிட்டு வந்தது. இந்த போர் காரணமாக சுமார் 12 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம் பெயர்ந்தனர். இதனை உலகின் மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடிகளில் ஒன்று என அமெரிக்கா கூறியிருந்தது.