தமிழ்நாடு, புதுவையில் வரும் 25 ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியான அறிவிப்பில், அதீத வெப்பத்தால் பொதுமக்கள் அசௌகரியத்தை சந்திக்கலாம் என்றும் கூறியுள்ளது. வரும் 27 ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான கோடை மழை பெய்யும் என்றும், புதுச்சேரி, காரைக்காலின் ஓரிரு இடங்களிலும் மண்ணை குளிர்விக்க மிதமான மழை பெய்யலாம் எனவும் கணித்துள்ளது.