உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் உள்ள லோக்பந்து மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பரபரப்பு நிலவியது. மருத்துவமனையின் 2 ஆவது தளத்தில் புகை வருவதை கண்ட மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக அங்கிருந்த சுமார் 200 நோயாளிகளை அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றினர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டும் வரும் முயற்சியில் ஈடுபட்டனர். உயிர்சேதம் தவிர்க்கப்பட்ட நிலையில், போலீசார் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.