3 நாள் பயணமாக பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு சென்றடைந்தார். பிரான்ஸ் தலைநகர் பாரிசீல் இன்று நடைபெறும் செயற்கை நுண்ணறிவு மாநாட்டிற்கு, அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் இணைந்து பிரதமர் மோடி தலைமை தாங்குகிறார். இதற்காக பாரீஸ் சென்ற பிரதமர் மோடியை அந்நாட்டின் ஆயுதப்படை அமைச்சர் நேரில் வரவேற்றார்.