Also Watch
Read this
By: Web Team

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் கர்ப்பிணிகள் முகக் கவசம் அணிய வேண்டும் என தமிழக பொது சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிக காய்ச்சல், இருமல், உடல் வலி, உள்ளிட்டவை கர்ப்பிணிகளுக்கு இருந்தால் மகப்பேறு காலத்துக்கு முன்பாகவே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டம் அதிகமாக உள்ள பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், முகக் கவசம் கட்டாயம் அல்ல என்றாலும், பாதுகாப்பிற்காக அணிவது நல்லது எனவும் தமிழக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved