இந்திய நடவடிக்கைகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்கும் விதமாக பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையில் தேசிய பாதுகாப்புக் குழுவின் கூட்டம் இன்று நடைபெறும் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் அனைத்து படைகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது.