இந்தியாவின் பின் தங்கிய பகுதியாக கருதப்பட்ட கிழக்குப் பகுதியை, நாட்டின் வளர்ச்சி இயந்திரமாக கருதுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற "ஒடிசா பர்பா" நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், புதிய அரசு அமைந்த 100 நாட்களுக்குள் ஒடிசா மாநிலத்திற்கு 45 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.